பிரார்த்தனை நடைபயிற்சி மற்றும் அதை எப்படி செய்வது
பிரார்த்தனை நடை என்பது - சுற்றி நடக்கும்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்வது. கண்களை மூடிக்கொண்டு தலையை குனிவதற்குப் பதிலாக, நம்மைச் சுற்றிப் பார்க்கும் தேவைகளுக்கு நம் கண்களைத் திறந்து வைத்து, கடவுள் தலையிடும்படி தாழ்மையான இருதயத்தோடு வணங்குவது.
நீங்கள் இரண்டு அல்லது மூன்று சிறிய குழுக்களாக பிரார்த்தனை செய்யலாம் அல்லது நீங்களே தனியாக பிரார்த்தனை செய்யலாம். நீங்கள் நடந்து ஜெபிக்கும்போது, கிடைக்கும் வாய்ப்புகளுக்காக எச்சரிக்கையாக இருங்கள். மேலும் வழியில் நீங்கள் சந்திக்கும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்காக ஜெபிக்க கடவுளுடைய ஆவியின் தூண்டுதலுக்கு கவனமாக இருங்கள்.
கடவுளுடைய வார்த்தை சொல்கிறது, “நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான எளிய வழி பிரார்த்தனை நடைபயிற்சி. சுற்றி நடக்கும்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்வது.
உங்கள் பிரார்த்தனைக்கு வழிகாட்டக்கூடிய நான்கு ஆதாரங்கள்:
கவனிப்பு
நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? ஒரு குழந்தையின் பொம்மையை ஒரு முற்றத்தில் இருக்கக் கண்டால், அக்கம் பக்கத்திலிருக்கும் குழந்தைகளுக்காக, குடும்பங்களுக்காக அல்லது அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்காக ஜெபிக்கும்படி நீங்கள் தூண்டப்படுவீர்கள்.
ஆராய்ச்சி
உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் அக்கம்பக்கத்தைப் பற்றிப் படித்திருந்தால், அங்கு வசிக்கும் மக்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருக்கலாம் அல்லது அந்தப் பகுதி குற்றம் அல்லது அநீதியால் பாதிக்கப்பட்டிருந்தால். இந்த விஷயங்களைப் பற்றி ஜெபித்து, அவர் செயல்படும்படி கேளுங்கள்.
வெளிப்படுத்துதல்
பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தைத் தூண்டி. ஒரு குறிப்பிட்ட தேவை அல்லது பிரார்த்தனையின் பகுதிக்காக ஒரு யோசனையை மனதில் கொண்டு வரலாம். கேளுங்கள் - மற்றும் பிரார்த்தனை செய்யுங்கள்!
வேதாகமம்
உங்கள் நடைக்கு ஆயத்தமாக கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியை நீங்கள் படித்திருக்கலாம் அல்லது நீங்கள் நடக்கும்போது பரிசுத்த ஆவியானவர் ஒரு வேதவாக்கியத்தை மனதில் கொண்டு வரலாம். அந்தப் பகுதியைப் பற்றியும், அந்தப் பகுதியில் உள்ள மக்களை அது எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றியும் ஜெபியுங்கள்.
ஜெபத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஐந்து பகுதிகள்:
அரசு
நீதிமன்றங்கள், கமிஷன் கட்டிடங்கள் அல்லது சட்ட அமலாக்க அலுவலகங்கள் போன்ற அரசாங்க மையங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அப்பகுதியின் பாதுகாப்புக்காகவும், நீதிக்காகவும், அதன் தலைவர்களுக்கு தெய்வீக ஞானம் கிடைப்பதற்காகவும் ஜெபியுங்கள்.
வணிகம் மற்றும் வணிக தொடர்பானவை
நிதி மாவட்டங்கள் அல்லது ஷாப்பிங் ஏரியா போன்ற வணிக மையங்களைப் பார்த்து பிரார்த்தனை செய்யுங்கள். நேர்மையான முதலீடுகள் மற்றும் வளங்களின் நல்ல நிர்வாகத்திற்காக ஜெபியுங்கள். பொருளாதார நீதி மற்றும் வாய்ப்புக்காகவும், மக்களை லாபத்திற்கு முன் வைக்கும் தாராள மனப்பான்மைக்காகவும், தெய்வீகமான மனப்பான்மையோடு கொடுப்பவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.
கல்வி
பள்ளிகள் மற்றும் நிர்வாக கட்டிடங்கள், தொழில் பயிற்சி மையங்கள், சமூக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி மையங்களை தேடுங்கள் மற்றும் அவற்றிற்காக பிரார்த்தனை செய்யுங்கள். நீதியுள்ள கல்வியாளர்கள், கடவுளின் சத்தியத்தைக் கற்பிக்கவும், தங்கள் மாணவர்களின் மனதைப் பாதுகாக்கவும் ஜெபியுங்கள். பொய் அல்லது குழப்பத்தை ஊக்குவிக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கடவுள் தலையிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். சேவை செய்வதற்கும் வழிநடத்துவதற்குமான இருதயம் கொண்ட ஞானமுள்ள குடிமக்களை இந்த இடங்கள் அனுப்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
தகவல்தொடர்பு
வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் போன்ற தகவல் தொடர்பு மையங்களைத் தேடுங்கள் மற்றும் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளின் கதை மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் சாட்சியம் நகரம் முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பரவ ஜெபியுங்கள். அவருடைய செய்தி, ஊடகத்தின் மூலம் அவரது திரளான மக்களுக்கு வழங்கப்படவும், எல்லா இடங்களிலும் உள்ள கடவுளின் மக்கள் கடவுளின் செயல்களைப் பார்க்கவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆவிக்குறியவைகள்
ஆவிக்குறிய மையங்களைத் தேடுங்கள் மற்றும் பிரார்த்தனை செய்யுங்கள். ஆவிக்குறிய காரியங்களைத் தேடும் ஒவ்வொருவரும் இயேசுவில் சமாதானத்தையும், ஆறுதலையும் பெற வேண்டும் என்றும், எந்த பொய் மதத்தாலும் திசை திருப்பப்படாமல் அல்லது குழப்பமடையாமல் இருக்கவும் ஜெபியுங்கள்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
- உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் இயற்கையாகவே பிரார்த்தனை செய்யக்கூடிய சாதாரண இடங்கள் யாவை?
- "ஆவிக்குறிய இருளில் இருக்கும்" மற்றும் உங்கள் பிரார்த்தனையால் பயனடையக்கூடிய, அருகிலுள்ள எந்த இடங்களில் நீங்கள் பிரார்த்தனை செய்யலாம்?
நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!
- உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
- அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
- ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
- உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.
பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.