Get started with Zúme Training
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.
கடவுள் தம்முடைய ராஜ்ய பொருளாதாரத்தில், நாம் எதைப் பெறுகிறோம் என்பதன் மூலம் அல்ல - மாறாக நாம் எதைக் கொடுக்கிறோம் என்பதன் மூலம் நாம் வெகுமதி பெறுகிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறார். கர்த்தர் நம்முடன் பகிர்ந்து கொண்டதைக் கடைப்பிடிக்கவும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும் போது, அவர் நம்முடன் இன்னும் அதிகமாகப் பகிர்ந்து கொள்வதாக வாக்களிக்கிறார். இயேசு சொன்னார் - மிகக் குறைவானதில் உண்மையுள்ளவரை அதிகமானதிலும் நம்பலாம். ஆழமான நுண்ணறிவு, அதிக நெருக்கம் மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு கடவுள் நம்மைப் படைத்தார். இப்படியே, தேவன் ஏற்கனவே நாம் செய்ய திட்டமிட்டுள்ள நற்செயல்களில், நாம் நடக்க முடியும்.
இராஜ்யத்தின் பொருளாதாரத்தில், நாம் எதைக் கொடுக்கிறோமோ அதன் மூலம் நாம் பலன் அடைகிறோம். இதுவே ஆவிக்குறிய சுவாசத்திற்கான அடிப்படை. கர்த்தர் நமக்குத் தெரிவிப்பதைக் கடைப்பிடித்து, அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும் போது, அவர் நம்முடன் இன்னும் தெளிவாகவும், முழுமையாகவும் தொடர்பு கொள்வார். ஆழமான நுண்ணறிவு, அதிக நெருக்கம் மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு கடவுள் நம்மைப் படைத்தார். இப்படியே, தேவன் ஏற்கனவே நாம் செய்ய திட்டமிட்டுள்ள நற்செயல்களில், நாம் நடக்க முடியும். கிறிஸ்துவின் சரீரத்திற்குள் (தேவாலயத்தில்) நாம் ஒருவருக்கொருவர் செய்யக்கூடிய மிகவும் சிறந்த காரியம் இரட்டை பொறுப்பை பயிற்சி செய்வதாகும். அதாவது, கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தியதற்கு கீழ்ப்படிந்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான பொறுப்பு; அதை செய்ய மற்றும் கற்பிக்க; அதை நடைமுறைப்படுத்த மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள. தேவனுடைய இராஜ்யத்தின் பொருளாதாரத்தின்படி வாழ்வது, சீஷராக இருப்பதன் முக்கிய பகுதியாகும். நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதால் பாக்கியவான்கள். நாம் பின்பற்றுபவர்கள் மற்றும் தலைவர்கள். நாம் கற்பவர்கள் மற்றும் ஆசிரியர்கள். இப்படித்தான் நாம் கடவுளின் தலைமைத்துவத்தை சிறப்பாக நடத்த முடியும். நாம் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைந்தவுடன் இந்த செயல்முறை தொடங்க வேண்டும். இவ்விதத்தில் ஊழியம் செய்ய ஆரம்பிக்க நாம் "முதிர்ச்சி" அடையும் வரை காத்திருக்கக் கூடாது. மாறாக, இந்த வழியில் ஊழியம் செய்வதன் மூலம் நாம் முதிர்ச்சியடைகிறோம். நாம் சுவாசிக்கிறோம் மற்றும் கடவுளிடமிருந்து கேட்கிறோம். நாம் சுவாசிக்கிறோம், நாம் கேட்பதைக் கடைப்பிடித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் சுவாசத்தை வெளியே விடுகிறோம், அவருக்கு கீழ்படிகிறோம்.
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.