Get started with Zúme Training
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.
பிரார்த்தனை நடைமுறை என்பது ஜெபத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு எளிய முறையாகும், அதை நீங்களும் பயன்படுத்தலாம் மற்றும் இயேசுவைப் பின்பற்றுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். வெறும் 12 எளிய அடிகளில் - ஒவ்வொன்றும் 5 நிமிடங்கள் - ஜெபம் செய்ய வேதம் நமக்குக் கற்பிக்கும் 12 வழிகளில் பிரார்த்தனை நடைமுறை உங்களுக்கு வழிகாட்டுகிறது. முடிவில், நீங்கள் ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்திருப்பீர்கள். “இடைவிடாமல் ஜெபியுங்கள்” என்று வேதம் சொல்கிறது. அதைச் செய்கிறோம் என்று நம்மில் பலர் சொல்ல முடியாது. ஆனால் இந்த முறையில் பிரார்த்தனை செய்த பிறகு - நீங்கள் ஜெபிப்பதில் இன்னும் ஒரு படி நெருக்கமாக இருப்பீர்கள்.
வெறும் 12 எளிய படிகளில் - ஒவ்வொன்றும் 5 நிமிடங்கள் - இந்த பிரார்த்தனை நடைமுறை, ஜெபிக்க வேதம் நமக்குக் கற்பிக்கும் 12 வழிகளில் உங்களுக்கு வழிகாட்டுகிறது. முடிவில், நீங்கள் ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்திருப்பீர்கள்.
துதி - கர்த்தரைத் துதிப்பதன் மூலம் உங்கள் ஜெபத்தை ஆரம்பம் செய்யுங்கள். இப்போது உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களுக்காக அவருக்கு துதி செய்யுங்கள். கடந்த ஒரு வாரத்தில் உங்கள் வாழ்க்கையில் அவர் செய்த ஒரு சிறந்த காரியத்திற்காக அவரைத் துதியுங்கள். உங்கள் குடும்பத்திற்கு அவர் செய்த நன்மைக்காக அவரைத் துதியுங்கள்.
காத்திருங்கள் - கர்த்தருக்கு காத்திருப்பதில் நேரத்தை செலவிடுங்கள். அமைதியாக இருங்கள், அவர் உங்களுக்கான பிரதிபலிப்புகளை ஒன்றிணைக்கட்டும்.
அறிக்கை செய்யுங்கள் - உங்கள் வாழ்க்கையில் அவருக்குப் பிடிக்காத காரியங்கள் ஏதாகிலும் இருக்குமாயின் அதை காண்பிக்கும் படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். உங்கள் தவறான அணுகுமுறைகளையும், நீங்கள் இன்னும் அறிக்கை செய்யாத குறிப்பிட்ட செயல்களையும் சுட்டிக்காட்டும்படி அவரிடம் கேளுங்கள். இப்போது நீங்கள் சுத்திகரிக்கப்படும்படி அதை கர்த்தரிடம் அறிக்கை செய்யுங்கள்.
வார்த்தையைப் படியுங்கள் - புதிய ஏற்பாட்டில் உள்ள சங்கீதங்கள், தீர்க்கதரிசிகள் அல்லது பிரார்த்தனையைப் பற்றிய வசனங்களைப் படிக்க நேரத்தை செலவிடுங்கள்.
கேளுங்கள் - உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்.
மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் - மற்றவர்களின் சார்பாக வேண்டிக் கொள்ளுங்கள்.
வார்த்தையை சொல்லி ஜெபியுங்கள் - வார்த்தையை சொல்லி ஜெபியுங்கள். வேத வசனங்களை சார்ந்த ஜெபங்களும், பல சங்கீதங்களும் இந்த நோக்கத்திற்கு நன்கு உதவும்.
நன்றி செலுத்துங்கள் - உங்கள் வாழ்க்கையில் நடந்த காரியங்களுக்காக, உங்கள் குடும்பத்தின் சார்பாகவும், உங்கள் தேவாலயத்தின் சார்பாகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.
பாடல்களைப் பாடுங்கள் - துதி பாடல்கள், ஆராதனைப் பாடல்கள் அல்லது ஆவிக்குறிய பாடல்களைப் பாடுங்கள்.
தியானம் செய்யுங்கள் - தேவன் உங்களிடம் பேசும்படி அவரிடம் கேளுங்கள். அவர் உங்களோடு பேசும் காரியங்களைப் பதிவு செய்ய ஒரு பேனா மற்றும் காகிதத்தை தயாராக வைத்திருங்கள்.
கவனித்து கேளுங்கள் - நீங்கள் படித்தவற்றையும், ஜெபித்த காரியங்களையும், பாடியவற்றையும் ஒன்றாகக் கொண்டு வாருங்கள். பின்னர் கர்த்தர் உங்களிடம் பேசுவதற்கு, அவற்றையெல்லாம் அவர் ஒன்றாகக் கொண்டு வருவதைப் பாருங்கள்.
துதி செய்யுங்கள் - கர்த்தருடன் நீங்கள் செலவழித்த நேரத்திற்காகவும், அவர் உங்களுக்கு அளித்த அனுபவங்களுக்காகவும் அவரைத் துதியுங்கள். அவருடைய ஒப்பற்ற பண்புகளுக்காக அவரைத் துதியுங்கள்.
மேற்கூறியவை கீழ்கண்ட புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. டிக் ஈஸ்ட்மேனின் புத்தகமான The Hour that Changes the World © 2002 by Dick Eastman, Chosen Books, Grand Rapids, MI, used by permission.
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.