Get started with Zúme Training
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.
இராஜ்ஜியம் எங்கு இல்லை என்பதைக் காண ஒவ்வொரு சீஷரும் தயாராக இருக்க வேண்டும். பரலோகத்தில் நடப்பது போல் பூமியிலும் கடவுளுடைய சித்தம் செய்யப்படாமல் இருக்கும் இடங்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளன. உடைந்து போன அனுபவம், வலி, துன்புறுத்தல், துன்பம் மற்றும் மரணம் போன்றவை, நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் இப்படிப்பட்ட மாபெரும் இடைவெளிகள் உள்ளன. அந்த இடைவெளிகளைத்தான் நாம் இந்த பூமியில் இருக்கும் போது, இராஜ்யத்திற்கான நமது உழைப்பை கொண்டு மூடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இராஜ்யம் எங்கு இல்லை என்பதைப் பார்க்க நம் கண்களைத் திறப்பது மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நமக்குத் தெரியாதவர்கள் மூலம் சென்றடைவது போன்றவைகளால், சீஷர்கள் பெருகுகிறார்கள் மற்றும் கடவுளின் இராஜ்யம் வெகு வேகமாக வளர்கிறது.
பூமியில் கடவுளுடைய சித்தம் சரியாகச் செய்யப்படுவதற்கும், தற்போது இருக்கும் சூழ்நிலைக்கும் இடையே உள்ள இடைவெளிகளை நாம் பார்க்க வேண்டும். இது இரண்டு கோளங்களில் நிகழ வேண்டும்:
முதல் கோளம் நமது தற்போதைய உறவுகள். இதில் நம்முடைய நண்பர்கள், குடும்பத்தினர், சக பணியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் உள்ளனர். இப்படித்தான் சுவிசேஷம் வேகமாகப் பயணிக்கிறது. இவர்கள் மீதான கவலை இயற்கையானது. லூக்கா 16:19-31 ல் நரகத்தில் எரியும் செல்வந்தனுக்கும் கூட தன் குடும்பத்தின் மீது இந்த மாதிரியான அன்பும், அக்கறையும் இருந்ததைக் காண்கிறோம். இந்த மக்கள் கடவுளால் நம் வாழ்வில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த உறவுகளை அன்புடனும், பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நாம் நன்றாக வழிநடத்த வேண்டும்.
அவர்களுக்குத் தெரிந்த 100 பேரை பட்டியலிட முயற்சிப்பதன் மூலம் இந்தக் குழுவிலிருப்பவர்களை தயார் செய்ய முயற்சிக்கலாம். அவர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்த ஊக்குவிக்கவும்: கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றாதவர்கள் மற்றும் ஆவிக்குறிய நிலையைப் பற்றி தெரியாதவர்கள்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அதிக பலனுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்க அவர்களை ஊக்குவிக்க முற்படலாம். கிறிஸ்துவை இன்னும் பின்பற்றாதவர்களை "சீஷர்களாக்க", வழிகளைத் தேட ஆரம்பிக்கலாம்.
இராஜ்யம் எங்கு இல்லை என்பதைப் பார்க்கும் இரண்டாவது கோளம், நமது தற்போதைய உறவுகள் அல்லது நமது தொடர்புகளுக்கு வெளியே உள்ளவர்களைக் கருத்தில் கொள்ளாது. பூமியிலுள்ள எல்லா மக்களையும் சீஷராக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர்கள் தற்போது இருக்கும் இடங்களிலும், அருகிலுள்ள பகுதிகளிலும், தங்களைவிட வித்தியாசமான மக்கள் மத்தியிலும், மேலும் "பூமியின் எல்லைகள்" வரையிலும் சீஷர்களை உருவாக்கும்படி அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். இப்படித்தான் சுவிசேஷம் வெகுதூரம் பயணிக்கிறது. இது இயற்கையானது அல்ல. இது இயற்கைக்கு அப்பாற்பட்டது. இது நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதற்கு சான்றாகும்.
கடவுளுக்குப் பிடித்தவை உண்டு. அவருக்குப் பிடித்தவை மிகக் குறைவு, கடைசி மற்றும் தொலைந்து போனவர்கள். எனவே, நமக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமல்ல, உலகில் ஆவிக்குறிய ரீதியில் இருண்ட மூலைகளில் இருப்பவர்களுக்கும் சேவை செய்வதில் நம் வாழ்க்கையை முதலீடு செய்ய வேண்டும். பெருமையுள்ளவர்களை கடவுள் எதிர்க்கிறார், ஆனால் தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார். நம்பிக்கையற்றவர்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும். நம்பிக்கையற்றவர்கள் மிகவும் தாழ்மையானவர்களாக இருப்பார்கள். அத்தகைய நபர்களில், நாம் குறிப்பாக உண்மையுள்ளவர்களைத் தேடி, முதலீடு செய்ய வேண்டும்.
கடவுள் வெளிப்படுத்தியதற்குக் கீழ்ப்படிவதன் மூலமும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது என்பதை நினைவில் வையுங்கள். இவர்கள் இயேசுவின் உவமையில் வரும் நல்ல மண்ணைப் போன்றவர்கள். அவர்கள் 30, 60 அல்லது 100 மடங்கு உற்பத்தி செய்பவர்கள். அவர்கள் செய்தியை நிராகரிக்கும் கடினமான இருதயம் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் துன்புறுத்தல்கள் வரும்போது விழுபவர்கள் அல்ல. அவர்கள் உலக கவலை அல்லது செல்வத்தின் மீது கவனம் செலுத்துபவர்கள் அல்ல. அவர்கள், இயேசுவின் ஊழியத்திற்குக் கீழ்ப்படிந்து, கடவுள் அவனுக்குச் செய்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்ட கதிரேன் ஊரிலிருந்த பேய் பிடித்திருந்தவனைப் போன்றவர்கள். இதன் விளைவாக, இயேசு பின்னர் அந்தப் பகுதிக்குத் திரும்பியபோது, திரளான மக்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்தனர்.
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.