மொழி


English English
አማርኛ Amharic
العربية Arabic
العربية - الأردن Arabic (Jordanian)
العربية التونسية Arabic (Tunisian)
Armenian Armenian
Sign Language American Sign Language
বাংলা Bengali (India)
भोजपुरी Bhojpuri
Bosanski Bosnian
မြန်မာဘာသာ Burmese
中文(繁體,香港) Cantonese (Traditional)
中文(简体) Chinese (Simplified)
中文(繁體) Chinese (Traditional)
Hrvatski Croatian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिन्दी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
日本語 Japanese
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
Кыргызча Kyrgyz
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
മലയാളം Malayalam
मराठी Marathi
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Odia
فارسی Persian/Farsi
Polski Polish
Português Portuguese
ਪੰਜਾਬੀ Punjabi
ਪੰਜਾਬੀ (ਪੱਛਮੀ) Punjabi (Western)
Русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Soomaali Somali
Español Spanish
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اردو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba

வாத்து குஞ்சுகள் போன்ற சீஷத்துவம் – தீவிரமான தலைமத்துவம்

வாத்து குஞ்சுகளுக்கும், சீடர்களை உருவாக்குவதற்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று தெரியுமா? வாத்துகள் கூட்டமாக நடந்து செல்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? வாத்துகள், உண்மையில் சீஷர்களை உருவாக்கும் ஒரு முக்கியமான கொள்கையை நமக்கு விளக்குகின்றன. கடவுளின் குடும்பம் அதிகமாக எண்ணிக்கையில் வளர்வதையும், விசுவாசத்தில் வளருவதையும் நீங்கள் பார்க்க விரும்பினால், வாத்து குஞ்சுகளைப் போல சீஷர்களை உருவாக்குவதைப் பற்றி சிந்தியுங்கள் - ஒரே நேரத்தில் பின்பற்றுபவர்களாகவும் தலைவராகவும் ஆகுங்கள்.

இந்த வீடியோவைப் பாருங்கள்

நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஒரு தாய் வாத்து வழிநடத்துகிறது மற்றும் அதன் வாத்து குஞ்சுகள் ஒவ்வொன்றாக - ஒரு வரிசையில் பின்தொடர்கின்றன. தாய் வாத்து வழிநடத்துகிறது. சிறிய வாத்துகள் பின்தொடர்கின்றன. ஆனால் நீங்கள் இன்னும் உற்று கவனித்துப் பார்த்தால், வேறு ஏதோ நடக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு சிறிய வாத்தும் உண்மையில் இரண்டு பாத்திரங்களை வகிக்கிறது - ஒரே நேரத்தில்:

எனவே வாத்து ஒரு பின்தொடர்பவரா அல்லது தலைவரா? இரண்டும் தான்.

அதனால்தான் வாத்துகளின் "நடைபயணம் " சீஷர்களை உருவாக்குவதுடன் தொடர்பு கொண்டுள்ளது. கடவுள் தனது குடும்பம் அதிகமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார் - எனவே ஒவ்வொரு பின்பற்றுபவரும், ஒரு தலைவராகவும், ஒவ்வொரு விசுவாசியும் ஒரு பங்காளராகவும், ஒவ்வொரு சீஷரும், சீஷர்களை உருவாக்குபவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் - ஒரே நேரத்தில்.

சீஷர்களாகவும், சீஷர்களை உருவாக்குபவர்களாகவும், நாம் விழும் பொறிகளில் ஒன்று, நாம் எதையும் பகிர்ந்து கொள்வதற்கு முன் எல்லாவற்றையும், அல்லது நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவறான நம்பிக்கை. ஆனால் சீஷத்துவம் அப்படி இல்லை.

சீஷர்கள் வாத்து குஞ்சுகளைப் போன்றவர்கள். ஒரு தலைவராக இருக்க, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் ஒரு படி மேலே இருக்க வேண்டும், அவ்வளவு தான். கடவுள் தனது குடும்பம் உண்மையில் வளர வேண்டும் என்று விரும்புகிறார் - எனவே ஒவ்வொரு தலைவரும் ஒரு பின்பற்றுபவராக இருக்க வேண்டும், ஒவ்வொரு பங்குதாரரும் ஒரு விசுவாசியாக இருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு சீஷரை உருவாக்குபவர்களும், ஒரு சீஷராக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் - ஒரே நேரத்தில்.

சீஷர்களாகவும், சீஷர்களை உருவாக்குபவர்களாகவும், நாம் விழும் மற்றொரு பொறி என்னவென்றால், யாரோ, எங்கோ எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள், அவர்களைக் கண்டுபிடித்து பின்பற்றினால், நாம் தயாராகி விடுவோம் என்ற தவறான நம்பிக்கை. ஆனால் சீஷத்துவம் அவ்வாறு செயல்படுகிறதில்லை.

கடவுளுடைய ராஜ்யத்தில், நாம் அனைவரும் பின்பற்றும் ஒரே ஒரு "தாய் வாத்து" உள்ளது -- அது இயேசு கிறிஸ்துவே. மிஷனரி இல்லை. போதகர் இல்லை. செமினரி பேராசிரியர் இல்லை. நம்முடைய விசுவாசத்தின் முழு அளவிற்கும் இயேசு மட்டுமே தகுதியானவர். எஞ்சியவர்கள் "செயல்பாட்டில்" இருக்கிறோம்.

நாம் பின்பற்றக்கூடிய இயேசுவுக்கு நெருக்கமாக ஒருவர் எப்போதும் இருப்பார். மேலும் நாம் வழிநடத்த வேண்டிய ஒருவர் எப்போதும் தொலைவில் இருப்பார். ஆனால் நம் நிலை எதுவாக இருந்தாலும், நம் கண்கள் - மற்றும் நம் இருதயம் - எப்போதும் இயேசுவின் மீது முழுமையாக நிலைத்திருக்க வேண்டும்.

வேதத்தில், புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியை எழுதிய பவுல், பல முதல் தேவாலயங்களைத் தொடங்கினார் - "என்னைப் பின்பற்றுங்கள்" என்று  எழுதவில்லை. "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல என்னைப் பின்பற்றுங்கள்" என்று எழுதினார். பல இடங்களிலும் உள்ள வாத்து குஞ்சுகளுக்கு என்ன தெரியும் என்பதை பவுல் அறிந்திருந்தார். ஒவ்வொரு சீஷரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதையும் பவுல் அறிந்திருந்தார் - கடவுளுடைய ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு தலைவரும் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் - நாம் அனைவரும் இயேசுவைப் பின்பற்றுகிறோம்.

வேதத்தில், பவுல் மேலும் எழுதினார்: “என்னிடமிருந்து நீங்கள் கேட்டதை... மற்றவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய, உண்மையுள்ள மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.” பல இடங்களில் உள்ள வாத்து குஞ்சுகளுக்கு என்ன தெரியும், ஒவ்வொரு சீஷரும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று பவுலுக்குத் தெரியும். கடவுளுடைய ராஜ்யத்தில் ஒவ்வொரு பின்பற்றுபவரும், ஒரு தலைவராக இருக்க வேண்டும் - நாம் அனைவரும் இயேசுவைப் போல, மற்றவர்களை வழிநடத்த வேண்டும், மற்றவர்களுக்காக நம் வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும். கடவுளின் குடும்பம் எண்ணிக்கையில் அதிகமாக வளர்வதையும், விசுவாசத்தில் வளருவதையும் நீங்கள் பார்க்க விரும்பினால், வாத்து குஞ்சுகளைப் போல சீஷர்களை உருவாக்குவதைப் பற்றி சிந்தியுங்கள் - ஒரே நேரத்தில் பின்தொடர்பவராகவும், தலைவராகவும் ஆகுங்கள்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

சூம் பயிற்சியை ஆரம்பிக்கவும்

சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.