Get started with Zúme Training
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.
நாம் பலுகிப் பெருகும் சீஷர்களை உருவாக்குவோம் என்றால், அவர்களை வெறும் நுகர்வோர்களாக மட்டும் இல்லாமல் அதாவது சீஷத்துவத்தை பின்பற்றுபவர்களாக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர்களாக அதாவது சீஷர்களை உருவாக்குபவர்களாக மாற்ற வேண்டும். இந்த ஒழுங்கற்ற உலகில், மக்களில் பலர் கடவுளின் திட்டத்தை நிராகரித்து விட்டனர், மேலும் பலர் தங்கள் ஆற்றலை, சிறிய விகிதத்திலேயே செலவிடுகிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் ஆனால் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்கள் நிரம்பியிருக்கிறார்கள், ஆனால் ஒருபோதும் ஊற்றாக செயல்படுவதில்லை. அவர்கள் உட்கொள்கிறார்கள் ஆனால் உற்பத்தி செய்வதில்லை.
நான்கு முக்கிய வழிகளில் கடவுள் நம்மை ஆவிக்குறிய ரீதியில் வளர்க்கிறார். இந்த தொகுப்பில் உள்ள முறைகள் இந்த நான்கு வழிகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கிறது:
ஒவ்வொரு சீஷரும் வேதத்தை கற்கவும், விளக்கவும், பிரயோகிக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல்வேறு ஆசிரியர்கள் மூலம், கடவுள் தம்முடைய வார்த்தையை உண்மையுள்ள மனிதர்களின் இருதயங்களில் பேசினார். அவர்கள் தாங்கள் கேட்டதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். கடவுளின் கதை, அவருடைய திட்டங்கள், அவரது இருதயம், அவருடைய வழிகள் ஆகியவற்றை வேதம் நமக்குக் கற்பிக்கிறது. ஒரு சீஷர் படிப்பவராக இல்லாவிட்டால், வேதத்தின் ஆடியோ-பதிப்பைக் கேட்பதில் தொடங்கி, வாய்வழி வழிமுறையுடன் கேட்பதற்கு அவர்/அவள் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று முறைகள், வேதத்தைப் புரிந்துகொள்வதற்கும், பிரயோகிப்பதற்கும், திறமையானவர்களாக இருப்பதற்கும் தேவையான திறன்களை, சீஷர்கள் வளர்த்துக் கொள்வதற்கு உதவுகிறது. மேலும் இந்த முறைகள் ஒன்றை விட ஒன்று அதிக பயனுள்ளதாக இருக்கிறது. உங்களிடம் இவை ஏற்கனவே இல்லையென்றால், கீழ்கண்டவற்றில் பார்க்கவும்!
ஜெபம், கடவுளுடனான நமது உறவுக்கு மிகவும் முக்கியமானது. ஜெபத்தின் மூலம் தான் நாம் அவருக்கு செவிசாய்க்கிறோம், அவரிடம் பேசுகிறோம். ஜெபம் அவரை இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ளவும், அவருடைய இருதயம், அவருடைய சித்தம் மற்றும் அவருடைய வழிகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. ஜெபம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும், அவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களுக்கு சாட்சி கொடுக்கவும் நமக்கு உதவுகிறது. பின்வரும் இரண்டு முறைகள் சீஷர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஜெப வாழ்க்கையிலும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதிலும் வளருவதற்கு உதவும். பிரார்த்தனை மனப்பான்மையில் வாழும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும், உலகை, மாம்ச கண் கொண்டு பார்ப்பதைக் காட்டிலும் ஆவிக்குறிய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கவும் அவை நமக்கு உதவுகின்றன. அவை நமது பிரார்த்தனை திறனையும் அதிகரிக்கிறது.
ஒருவருக்கொருவர் நாம் தேவைப்படுகிற விதத்தில், கடவுள் இந்த மாம்சத்தை வடிவமைத்திருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பலங்களும், பலவீனங்களும் உள்ளன. நாம் ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுத்து, ஒருவருக்கு ஒருவர் சேவை செய்ய வேண்டும். ஒரு சீஷனின் வாழ்க்கை என்பது கடவுளுடனான உறவை மட்டுமல்ல, அது மற்றவர்களுடனான உறவையும் உள்ளடக்கியது. சீஷத்துவம் என்பது தனிப்பட்டது மட்டுமல்ல, அது கூட்டுத் தன்மையும் கொண்டது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள முறைகள், கடவுள் நமக்குச் சொல்வதைக் கடைப்பிடிப்பதற்கும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், இரண்டு நபர்களுக்கும் ஒரு அன்பான, பொறுப்பான சூழலில் ஒருவரையொருவர் அன்பிலும், நல்ல செயல்களிலும் தூண்டவும் உதவுகின்றன.
கடவுள் பல வழிகளில், நாம் துன்புறுத்தப்படுவதையும், நமது துன்பத்தையும், நம் நன்மைக்காக பயன்படுத்துகிறார். நம் குணத்தைச் செம்மைப்படுத்தவும், நம்மில் தெய்வீகப் பண்புகளை வளர்க்கவும் அவர் அதைப் பயன்படுத்துகிறார். நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் அவர் அதைப் பயன்படுத்துகிறார். துன்பப்படுகிற மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய நம்மை ஆயத்தப்படுத்த அவர் அதைப் பயன்படுத்துகிறார். அவருடைய நாமத்தின் நிமித்தம் தியாகம் செய்வதற்கும் நாம் தயாராக இருப்பதன் மூலம், அவர் தம்மை மகிமைப்படுத்தவும் அதைப் பயன்படுத்துகிறார். இவ்வுலகில் நாம் அவருக்காக முழுமையாக வாழ முற்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்று கடவுள் வாக்களித்திருக்கிறார். அவருடைய ராஜ்யத்திற்காக துன்புறுத்தலையும், துன்பத்தையும் எதிர்பார்க்கும்படி சீஷர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் அதை எதிர்கொள்ளும்போது குழப்பம், கசப்பு, கோபம், வெறுப்பு, ஊக்கம் அல்லது மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சீஷர்களை அவர்களின் புதிய வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே துன்பத்தை எதிர்பார்க்கவும், அதற்கு நல்ல பதிலை அளிக்கவும், சரியானதைச் செய்வதில் கடவுளை உண்மையுள்ள படைப்பாளராக நம்புவதற்கும் நாம் தயார்படுத்த வேண்டும். ராஜ்யத்திற்கான துன்பம் நம்மைத் தயார்படுத்துகிறது மற்றும் நித்தியத்தில் கிறிஸ்துவுடன் நித்திய ஆட்சிக்காக நம்மைச் செம்மைப்படுத்துகிறது.
Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.