தரிசனத்தை கொடுப்பது சிறந்த ஆசீர்வாதத்தை வெளிப்படுத்துகிறது
யாரேனும் இயேசுவைப் பின்பற்றத் தேர்வுசெய்தால், சரியான பாதையில் செல்ல அவர்களுக்கு எப்படி உதவுவீர்கள்? இயேசுவைப் பின்பற்றுபவராக அவர்கள் அனுபவிக்கக்கூடிய மிகப் பெரிய ஆசீர்வாதத்தை, ஒரு தரிசனத்தைக் அவர்களுக்கு கொடுப்பதின் மூலம் தொடங்குங்கள்.
இதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:
இயேசுவைப் பின்பற்றுவது ஒரு பாக்கியம். இயேசுவைப் பின்பற்றும்படி மற்றவர்களை வழிநடத்துவது ஒரு பெரிய ஆசீர்வாதம். ஒரு புதிய ஆவிக்குறிய குடும்பத்தைத் தொடங்குவது ஒரு பெரிய ஆசீர்வாதம். புதிய ஆவிக்குறிய குடும்பங்களைத் தொடங்க மற்றவர்களை ஆயத்தப்படுத்துவது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.
இந்த வீடியோவைப் பாருங்கள்
மிகப் பெரிய ஆசீர்வாதத்தைப் பகிர்வதற்கான உதாரணம்.
கிறிஸ்துவைப் பின்பற்றத் தேர்வு செய்தவுடன், இந்தக் கொள்கைகளில் சிலவற்றைப் பயன்படுத்துவது அவர்களை சரியான பாதையில் தொடங்க செய்வதற்கு, ஒருவரைப் பயிற்றுவிப்பதற்கு, இது ஒரு சிறந்த வழியாகும்.
முதலில், அவர்களின் தகவல்களைப் பெற்று, பிறகு அவர்களிடம் இப்படி சொல்லுங்கள்:
“தேவனைப் பின்பற்றுவது ஒரு ஆசீர்வாதம். பிறர் தேவனைப் பின்பற்ற வழிவகுப்பது பெரும் பேறு. ஒரு புதிய ஆவிக்குறிய குடும்பத்தைத் தொடங்குவது ஒரு பெரிய ஆசீர்வாதம். புதிய ஆவிக்குறிய குடும்பங்களைத் தொடங்க மற்றவர்களை ஆயத்தப்படுத்துவது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். பெரிய ஆசீர்வாதம், பெரியதான ஆசீர்வாதம் மற்றும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பெற உங்களுக்கு உதவ விரும்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த 100 பேரின் பட்டியலைத் தயாரித்து, அவர்களில் நீங்கள் உடனடியாக பகிர்ந்து கொள்ள விரும்பும் ஐவரை (தேவனைத் தெரியாதவர்கள்) தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னர், அவர்கள் தங்கள் பட்டியலைத் தயாராக வைத்திருந்தால், அவர்களின் சாட்சியத்தையும், சுவிசேஷத்தையும் பகிர்ந்து கொள்ள அவர்களைத் தயார் படுத்துங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த ஐந்து நபர்களிடம் அதை சொல்வதற்கு ஒன்று முதல் ஐந்து முறை பயிற்சி செய்ய சொல்லுங்கள். அவர்கள் பயிற்சி செய்யும் போது அந்த ஐந்து நபர்களை போன்று நீங்கள் செயல் படுங்கள்.
பின்னர், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்களைப் பார்க்க ஒரு சந்திப்பை மேற்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்ட போது, அது எப்படி நடந்தது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் வரவில்லை என்றால், அவர்களின் தொடர்புத் தகவல் உங்களிடம் உள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்களை மீண்டும் சந்திக்கவும். அவர்கள் பகிரவில்லை என்றால், புதிதாக எதையும் பேச வேண்டாம். பகிர்ந்து கொள்வ்தற்காய் அவர்களுடன் செல்ல முன்வரவும். அவர்களுடன் மேலும் பயிற்சி செய்ய முன்வரவும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். இருப்பினும், இந்த நபர் "நல்ல மண்" அல்ல என்று நீங்கள் சந்தேகிக்கத் தொடங்கலாம், அப்படியிருந்தால், நீங்கள் அவர்களில் அதிக முதலீடு செய்ய மாட்டீர்கள்.
அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள் ஆனால் யாரும் நம்பவில்லை என்றால், மகிழ்ச்சியாக இருங்கள்! ஞானஸ்நானம் பற்றி அவர்களிடம் பேச ஆரம்பித்து, சீஷராக்கும் முறைகளில் ஒன்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் 100 பட்டியலிலிருந்து சில கூடுதல் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், தேவையான பயிற்சி செய்யவும் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
அவர்கள் பகிர்ந்திருந்து, சிலர் நம்பியிருந்தும், மிகப் பெரிய ஆசீர்வாதத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தவறியிருந்தால், அவர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள். மதிப்பீடு செய்து, செயல்முறையைத் தொடர அந்த நபர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்.
அவர்கள் பகிர்ந்து கொண்ட பின், சிலர் நம்பின பிறகு, மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருந்தால், மிகவும் உற்சாகமாக இருங்கள்! அவர்கள் "நல்ல மண்" என்று கருதி, அவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சியில் கணிசமான முதலீடு செய்ய திட்டமிடுங்கள். ஞானஸ்நானம் பற்றி பேசத் தொடங்குங்கள் மற்றும் 3/3 வது குழு வடிவமைப்பிற்கு அவர்களை அறிமுகப்படுத்துங்கள் மற்றும் அவர்களுக்கு அதை மாதிரியாக செய்து காட்டவும். அதனால் அவர்கள் தாங்கள் தேவனிடம் வழிநடத்திய நபர்களைக் கொண்டு ஒரு குழுவைத் தொடங்க முற்படலாம்.
ஸூம் பயிற்சிக் கருவிகளினால் வரும் மிகப் பெரிய ஆசீர்வாதம்
- SOAPS வேத வாசிப்பு, கணக்கொப்புவிக்கும் குழுக்கள், பிரார்த்தனை சுழற்சி ஆகியவற்றிற்கான ஆசீர்வாதங்கள்
- உங்கள் 3 நிமிட சாட்சியத்தையும் கடவுளின் கதையையும் பகிர்ந்து கொள்ளுங்கள், பிரார்த்தனை நடைபயிற்சி ஆகியவற்றிற்கான ஒரு பெரிய ஆசீர்வாதம்...
- 3/3 பேர் குழுவைத் தொடங்கவும் போன்றவற்றிற்கு இது ஒரு பெரிய ஆசீர்வாதம் ...
- 3/3 குழுவைத் தொடங்குவது, 3/3 குழுக்கள் ஆகத் தொடங்குவது, ஆவிக்குறிய குடும்பங்களின் நெட்வொர்க்கைப், பயன்படுத்திதலைமைத்துவ செல்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கு மிகப் பெரிய ஆசீர்வாதம்
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
- நீங்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய போது உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மாதிரி இதுதானா? இல்லையென்றால், எது வித்தியாசமாக இருக்கிறது?
- நீங்கள் விசுவாசத்திற்குள் வந்த பிறகு, மற்றவர்களை சீஷராக்க ஆரம்பிக்க எவ்வளவு காலம் ஆனது?
- புதிய விசுவாசிகள், உடனடியாக மற்றவர்களிடம் சுவிஷேசத்தைப் பகிரவும், சீர்படுத்தவும் தொடங்கினால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!
- உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
- அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
- ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
- உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.
பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.