கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
தேவாலயம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆரம்பத்தில் யாரும் அதில் சிறந்தவர்களாக இருக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? நல்ல வேளையாக, வல்லுநர்கள் தேவைப்படாத ஒரு திட்டத்தை கடவுள் வைத்திருந்தார். தேவன் சாதாரண மக்களைப் பயன்படுத்துகிறார். தேவாலயத்தின் முதல் இயக்கத்தைத் தொடங்க அவர் சாதாரண மக்களையே பயன்படுத்தினார். அவர் இன்றும் அதையே செய்கிறார்.
முதல் தேவாலயம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்ல சாதாரண மக்களையே அனுப்பியது. அது, சாதாரண மக்களை ஆளுநர்கள், தளபதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் அரசர்கள் முன் நிற்க அனுப்பியது. நோயாளிகளைக் குணப்படுத்தவும், பசியுள்ளவர்களுக்கு உணவளிக்கவும், மரித்தவர்களை எழுப்பவும், உலகில் உள்ள அனைவருக்கும் கடவுளின் பிரமாணங்கள் அனைத்தையும் கற்பிக்கவும் சாதாரண மக்களையே அனுப்பியது.
முதல் தேவாலயம், உலகை மாற்ற சாதாரண மக்களை அனுப்பியது. அவர்கள் அதை செய்தார்கள்.
இந்த வீடியோவைப் பாருங்கள்
இயேசு சொன்னதைச் செய்வதே நம்முடைய கனவாக இருக்கிறது -- உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்களுக்கு உதவ, சிறிய காரியங்களைப் பயன்படுத்தி, கடவுளுடைய ராஜ்யத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!
தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு, இயேசு சொன்ன கடைசி அறிவுரைகள் எளிமையானவை. அவர் சொன்னார் – வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி,அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார் - உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும்.
இயேசுவின் கட்டளை எளிமையானது - சீஷராக்குங்கள்.
அதை எப்படி செய்வது என்பது குறித்த அவருடைய வழிமுறைகள் எளிமையானவை: (1) நீங்கள் எங்கு சென்றாலும் சீஷர்களை உருவாக்குங்கள்; (2) பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதன் மூலம் சீஷர்களை உருவாக்குங்கள்; (3) அவர் கட்டளையிட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிவதைக் கற்பிப்பதன் மூலம் சீஷர்களை உருவாக்குங்கள்.
அப்படியானால் ஒரு சீஷனை உருவாக்குவதற்கான படிகள் என்ன? (1) நாம் எல்லா நேரத்திலும் சீஷர்களை உருவாக்குகிறோம் - நாம் எங்கு சென்றாலும், செல்லும் போதும். (2) யாராவது இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்தால் - அவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும். (3) அவர்கள் வளரும்போது - இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு சீஷருக்கும் கற்பிக்க வேண்டும். அவர் கட்டளையிட்ட காரியங்களில் ஒன்று சீஷர்களை உருவாக்குவது என்பதால், இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொரு சீஷரும், சீஷராக்குவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
- தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் அவருடைய பெரிதான இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கும் போது, உண்மையில் ஏன் ஒரு சிலரே சீஷர்களை உருவாக்குகிறார்கள்?
- கடவுள் சாதாரண மக்களைப் பயன்படுத்துகிறார் என்பது, நீங்கள் கற்றுக்கொண்டது அல்லது திட்டமாக கருதியதிலிருந்து வேறுபட்டதா?
நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!
- உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
- அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
- ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
- உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.
பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.